Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

தேடல்கள்
தேடல்கள்
தேடல்கள்
Ebook169 pages1 hour

தேடல்கள்

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

ஆன்மிகப் பெரியோர்களாய்ப் பற்றி கேட்டிடுக்கிறோம் படித்திருக்கிறோம். அவர்களுக்கு னம்மைப் போன்ற சாதாரண மனிதர்காளுக்கு இல்லாத பல சக்திகள் பெற்றிருப்பதை அறிவோம். அதை எவ்வாறு பெற்றார்கள். நம்மால் ஒரு சித்தராக, ஞானியாக மாற முடியுமா?
சில ஞானிகளின் வாழ்க்கையை அலசுவோம்.
மக்க்ளுக்கு தெய்வீகம் ஆன்மிகம் இரண்டிலும் குழப்பம். தெய்வீகமும் ஆன்மிகமும் ஒன்றல்ல.
பொருளைத்தேடி ஓடும் வாழ்க்கையில் தெய்வீகம் ஒரு பேருதவி. ஆன்மிகம் என்பது புலங்காளில் சிக்காத ஆன்டவன், ஆன்மா போன்றவற்றைத் தேடிப் பிடிக்கும் ஒரு தீவிர தேடல்.
ஆன்மிகத்தில் இணைந்துவிட்டால் மாயை துரத்தாது. பெரும் ஞானிகள் அனைவரும் ஆன்மிக வாழ்க்கையில் ஈடுபட்டோர்

Languageதமிழ்
PublisherN.Natarajan
Release dateMar 10, 2015
ISBN9781310134043
தேடல்கள்
Author

N.Natarajan

Electronics Engineer, tech trainer, author .A certain event in my early life changed my pursuit from normal material life everyone else and became a seeker. I was seen as a Mad guy as I went around trying to find a Man-of-knowledge. A great Spiritual master, Swamy Rama of Himalayan Institute was my first guru. He made me realize that there is none who can answer all my questions and that several Gurus will appear before me and educate me and vanish. It happened in all these years.For my own use I made notes and that I published as free e-books so that people who are in their spiritual journey benefit from my experience. I have written about Spiritual and Religious titles (Spirituality is not Religion) some in Tamil and others in English.AT some point the poor and poverty came into my attention. I learnt Economics , Politics, the way Human mind work and Education - they are all linked to Poor and Poverty.I never priced my writing. Because I believe that knowledge should not be sold. After all I got them from several noble souls and not mine.Recently for the recent title: Three ways of Living (First of the three book series that help one pursue (1) Celestial Pleasure (2) Yogic Power and (3) Salvation I made it that the reader may decide the price.I am happy to find five readers opted to pay USD 4.95.I am working-out the way that the sale proceeds of my writings (ebooks) reach the trust that builds and manages the Memorial for Kanchi Seer Chandra Sekara Saraswathi, in Orikkai. Tamilnadu.Worked for telephones Madurai. 1968 to 71, TERLS ISRO Trivandrum. 1971 to 75. Isro Sriharikotta 1976 to 78Min of Planning govt computer center Delhi, 1978 to 82.DoE (NATIONAL INFORMATICS CENTER). Delhi six months 1982 june -1983 Dec.CMC LTD DELHI AND. CMC LTD CORP R&D Hyderabad 1983 to 1997.Rendezvous on Chip Secunderabad 1997 to 2000.Sophists Technologies Hyderabad 2001. To 2003.Robert Bosch India bangalore. 2003 to 2004.Freelance Tech trainer, author,. from 2004 to now.So for written 31 titles and 5 more on the preparation.The topics include: short stories Religion and spirituality, Education - Economics - poverty and - politics are disasters to the society.My 40 year long Spiritual journey, I realize, has come to an end. I am sharing my learning with readers.

Read more from N.Natarajan

Related authors

Related to தேடல்கள்

Related ebooks

Reviews for தேடல்கள்

Rating: 4.75 out of 5 stars
5/5

4 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    தேடல்கள் - N.Natarajan

    Publishing Particulars

    Title

    தேடல்கள்

    விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் ஆன்மிகம்

    Author

    N.Natarajan

    Smashwords Edition

    Contents

    அத்தியாயம் 01 இந்த புத்தகம். ஏன்?  யாருக்காக?  

    எச்சரிக்கைகள் (அனைவருக்கும்) - எச்சரிக்கை (வாசகர்களுக்கு) - எச்சரிக்கை (போலி சாமியார்களுக்கு) - எச்சரிக்கை (நல்ல நண்பர்கள், சொந்த பந்தங்களுக்கு)

    அத்தியாயம் 02 குழப்பலோ குழப்பல்

    ஆத்திகமும் – ஆன்மிகமும் - 2.2 மதங்கள், கடவுள், அழிவுகள்.  முடிவாக

    அத்தியாயம் 03

    சாமியார்கள் உருவாவது எப்படி?

    அறிமுகம் - சாமியார்கள் உருவாகிறார்கள்-சாதாரண மனிதரே மகானாக மாறுகிறார்.

    கதை 01; ஜாடிக் ஒரு சிறுகதை - ஜாடிக் கதையிலிருந்து அறிந்து கொள்வது - போலிகள் வேண்டாம் - கதை 02 கந்தசாமி ஞானியைத் தேடினார்- எளிமை - கதை 03: பயணிகள் -  நான் துறவிகளை தேடி அலைந்தேன் - துறவி எப்படி இருப்பார்? துறவியும் தாடியும் - துறவியல்லா துறவிகள்

    துறவிகளை காண்பது எப்படி?

    சாமியார்களை பற்றிய பல (தவறான) எண்ணங்கள் - வளர்ந்த நாடுகளும் இதற்கு விதிவிலக்கல்ல - ஞானிகளிடம் எதை எதிர்பார்க்கலாம்?

    அத்தியாயம் 04

    சில சாமியார்கள் உருவான கதைகள் -

    அறிமுகம்

    சுவாமி ராமா - புத்தர் மகானான கதை

    கதை ஏழை மன்னரும், செல்வந்தரான துறவியும். - செயிண்ட் பேட்ரிக்ஸ் - ரமண மகரிஷி ஏன் ஆன்மீக பயணம் மேற்கொண்டார்? - ஸேஷாத்ரி ஸ்வாமிகள் - சதாசிவ பிரும்மேந்திரர் - ராமலிங்க அடிகள்  - காரைக்கால் அம்மையார் - காஞ்சிப் பெரியவர் - திருமூலர்.

    அத்தியாயம் 05.

    ஞானிகளைப் புரிந்து கொள்வோம் - ஞானிகள் என்னவெல்லாம் செய்வார்கள்?

    மன்னர்களை நல் வழிக்கு கொண்டு வருவது.

    கதை-03 சுல்தானுக்குத் தலை வணங்காத துறவி. கதை 04 சாமுராய்.  துறவிகளின் பரந்த அறிவு, வென்றிட உதவும்.

    கதை 05 ஒரு ஜென் குருவும், திமிர் பிடித்த அரசனும்

    ஞானிகளின் வினோதமான செயல்களில்

    கதை 06 ஸுஜுகி ரோஷி;

     ஞானிகளுக்கு நகேச்சுவை உணர்வு இருக்காதா?

    கோப்பைக்குள் ஒரு பாடம்

    கதை 06, நமது சிறிய பிரச்சினைகள்

    துறவிகள் எல்லோருமே ஞானிகளில்லை.

    கதை 07. விரலை நறுக்கிய புத்த துறவி

    துறவியின் பொறுமை அன்பின் எல்லைகள்

    கதை 08.

    வீண்பழி ஏற்ற புத்த துறவி

    கதை 09. கழுதையில் அறிவை கண்ட ஸுபி துறவி;

    சரித்திரத்தில் இப்படிப்பட்ட துறவிகள் பலரைக் காணலாம்.

    கதை 10. புத்தகம் திருடிய துறவி

    ஸுபி ஞானிகள்

    அத்தியாயம் 06

    அறிவும் - மக்களில் நான்கு பிரிவுகளும்.

    ஹரித்வாரில் ஒரு சாது

    கேட்காத கேள்விக்குக் கிடைத்த பதில்.

    ஞானிகள் அறிவதென்ன?

    ஒரு ஜென் கவிதை

    அத்தியாயம் 1

    ஆன்மிகம் என்றால் என்ன?

    ஆன்மிகம் என்றால் என்ன என்ற கேள்விக்கு ஒவ்வொருவரும் ஒரு விளக்கம் தருவார்கள்.

    ஆன்மிகத்தைப் பற்றி நாம் தவறாக அறிந்ததும், அப்படி அறிந்ததில் குழம்பியவர்களும் ஏராளம்.

    இன்று, ஆன்மிகம் என்ற பெயரை இணைத்தால் எதை

    வேண்டுமானாலும் சுலபமாக விற்கலாம். அது மட்டும் இல்லை. அதில் கொள்ளை லாபமும் கிடைக்கும். (ஓட்டல் வைத்திருக்கும் வாசகர்களே! ஆன்மிக இட்டலி, ஆன்மிக ஆப்பம் என்று காவிக் கலரில் சட்டினியுடன் தரலாம்)

    சில ஆண்டுகளுக்கு முன்னால் கோவில்கள் மற்றும் திருவிழாக்களைப் பற்றிய செய்திகளை வெளியிட வெட்கப்பட்டப் பத்திரிக்கைகள் அனேகம். சமீப காலத்தில், ஆன்மிகம் என்ற பக்கம் இல்லாத செய்தித்தாள் எதுவும் இல்லை. அதுவும் போதாதென்று எல்லா மாத, வார பத்திரிக்கைகளும் வழக்கமான பதிப்புடன் ஆன்மிகம் பெயர் தாங்கி ஒரு தனிப் பத்திரிக்கையை தவறாது வெளியிடுவதைக் கவனிக்க வேண்டும்.

    ஆன்மிகத்தைப் பற்றி எழுதுபவர்களும் படிப்பவர்களும் என்றுமே சிந்திக்கமாட்டர்களா என்று நான் ஏங்குவதுண்டு. கோவிலுக்குச் சென்று பூசாரி வைத்த பூவை காதில் சுமந்து வருகின்ற, முறையான கல்வி அறிவை அடையாத மக்களை விட்டுவிடுவோம். ஆன்மிகப் பத்திரிக்கைகளைப் படிக்கும் மக்கள் பலர் முறையான கல்வி அறிவு பெற்றவர்கள் தானே.? அவர்கள் கூட, ஆன்மிகம் என்றால் கடவுள், வழிபாடுகள், கோவில்கள் என்று அடுக்கிக்கொண்டே போவார்கள்.

    மலையாள மொழியில் இதை விளக்கும் ஒரு சொற்றொடர் உண்டு. ஒருவன் சொன்னானாம், அஞ்சனம் என்பது ஞானறியும். அது மஞ்ஞளப்போல வெளுத்திரிக்கும். அதாவது, கண் மை என்ன என்று எனக்குத் தெரியும். அது மஞ்சள் கிழங்கைப் போல வெள்ளை நிறத்தில் இருக்கும்.

    இந்த ஆள் கண் மையைப் பார்த்திருப்பாரா? இல்லை மஞ்சக் கிழங்கையோ அல்லது வெள்ளை நிறத்தையோ அறிவாரா? நம்ம ஊர் ஆன்மிக அறிவும் மேலே குறிப்பிட்ட கண் மையைப் போலத்தான்.

    வாசக நண்பர்களே, ஆன்மிகக் கடையில் வியாபாரம் ஆவது ஆத்திகம். ஆன்மிகம் அல்ல.

    ஏனெறால் ஆன்மிகம் வேறு ஆத்திகம் வேறு. இதைப் பலர் நம்பத் தயாரில்லை. அதை விட அதிர்ச்சி தரும் செய்தி, ஆத்திகமும், ஆன்மிகமும் நேர்-எதிரான அல்லது எதிரும்-புதிருமான செயல்பாடுகளைக் குறிக்கும்.

    முடிவாக, இந்த புத்தகத்தைப் படித்தால் ஆன்மிகம் மற்றும் ஆன்மிக பெரியவர்களைப் பற்றி உண்மையான மற்றும் சுவையான தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். காலம் காலமாக கலாசாரத்தின் மூலமாக நம் தலையில் நுழைந்த பல தவறான நம்பிக்கைகள் - எதிர்பார்ப்புகள் எண்ணங்கள் ஆகிய சிலவற்றை கழட்டிவிட, இவை உதவலாம்.

    சரியான முறையில் ஆன்மிகம், மற்றும் ஆன்மிக பெரியோர்களைப் பற்றி அறிந்து, அவர்களை பின்பற்றி நாமும் நலம் அடைய, இந்தப் புத்தகம் உதவும்.

    பொதுவாகவே ஆன்மிகம், தத்துவம் ஆகியவை துப்பறியும் நாவல்களைப் போல ஒரு விறுவிறுப்பாக படிக்கும் விஷயம் இல்லை.

    கதைகள் பல சேர்த்து, என்னால் முடிந்தவரை இதை மிக மிகச் சுவையானதாக மாற்ற முயற்சி செய்திருக்கிறேன்.

    எனது தேடல், சுமார் 38 ஆண்டுகள் முன்னால், தப்பிக்க ஒரு வாய்ப்பும் இல்லாத ஒரு விபத்திலிருந்து தப்பித்ததில் தொடங்கியது.

    அதை ஒரு அமானுஷ்ய சக்தி அல்லது மனிதர்களின் சக்தியை மீறிய ஒன்று என்று சொல்வார்களே. அது எனது தேடலுக்கு வித்திட்டது.

    உண்மையாகவே அப்படி ஒரு சக்தி இருக்கிறதா? மனிதர்கள் அதை அடைவது எப்படி என்று தேடப்போன எனக்கு மாதிரியாக நம்மைப் படைத்த பிரம்மாவைக் கண்டுபிடித்த அதிர்ச்சி வேறு.

    அடுத்த அத்தியாயத்திற்கு போகும் முன்னால், கீழே கண்ட சில எச்சரிக்கைகளைக் கவனிக்கவும்.

    1. எச்சரிக்கைகள் (அனைவருக்கும்)

    1. இந்த புத்தகம் ஒரு துறவி ஸ்பெஷல்.

    2.துறவியின் ஒரே ஒரு உடமை அவர்கள் கடின உழைப்பில் பெற்ற அவர்கள் அறிவு அல்லது ஞானம். (முற்றும் துறக்காமல், ஏறத்தாழ, முக்காலும் துறந்த இரண்டாம் வகை துறவிகள்தான் இந்த தத்துவ ஞானிகள் அல்லது பிலாசபர்கள்).

    3. துறவிகளைப் பற்றி மக்கள் சரியாக அறிந்தது மிகவும் குறைவு. ஆனால், இவர்களைப் பற்றி தவறாக அறிந்தது என்னவோ, கணக்கே இல்லை. ஆரம்ப காலத்தில் இந்த சாதுக்கள், ஸுபி, புத்தமத குருமார்கள் என்ற எல்லோருமே வெவ்வேறு மதங்கள் வகுத்த பாதையில் பயணம் செய்தவர்கள். அதில் முதிர்ந்தவர்கள்.

    4. சில ஞானிகள் நடந்த பாதைகளில் கடவுள், வாழைப்பழம், ஆராதனைகள் என்று எதுவுமே கிடையாது.

    5. சாதாரண மனிதர்களான நாம், ஜாதி மதம் இனம் மொழி சாராயம் கட்சி என்ற ஒன்றின் மேல் ஒன்றாக சிறிய வட்டங்களுக்குள் அடைபட்டு, அடிமைப் படுத்தப்பட்டு அவற்றின் விளைவாக அவதிதான் வாழ்க்கை என்ற ஒரு முடிவுக்கு வந்து, ஏதோ ஒருமாதிரியாக வாழ்ந்து கடைசியில் மடிகிறோம்.

    6. இதே மக்கள் மத்தியில் பிறந்த சிலர், மாயை விலகி, எதை எதையோ (உண்மை, இறைவன் உள்பட) தேட முயற்சி செய்கிறார்கள், சிலர்.

    அதன் காரணமாக, பல சிறிய வட்டங்களிலிருந்து விலகி மனித நேயம், எல்லா உயிர்களின் மீது அன்பு கருணை தியாகம் என்ற பெரிய பெரிய வட்டங்களுக்குள்ளே, ஒவ்வொன்றாக தாவித்தாவி, கடைசியில் ஆன்மிக அறிவு என்ற ஒரு பெரிய வட்டத்தில் சேர்கிறார்கள்.

    இதன் பலன்? புலன்களில் சிக்காத உயர்ந்த அறிவை அடைகிறார்கள் இந்த மக்கள். தானும் துன்புறாமல், துன்புற்ற மற்றவருக்கெல்லாம் உதவும் இவர்களை பொதுவாக ஞானிகள் என்கிறது உலகம்.

    7. ஒரு ஆசாமி, நிலத் தகராரில் கொலை செய்துவிட்டு, சட்டத்தின் பிடியில் சிக்காமல் இருக்க, காட்டுக்குள் புகுந்தார். அங்கே நரக வேதனையை அனுபவித்து வரும்போது அதிருஷ்டவசமாக யாரோ ஒரு சாமியாரைக் கண்டார். அவரை வெகுநாள் சுற்றி வந்து காக்காய் பிடித்து, கடைசியாக ஒரு சீடனாக மாறிவிட்டார். (பிற்காலத்தில் குற்ற உணர்வு துரத்த, பிறந்த மேனியாக, தான் வசித்த கிராமத்தை அடைந்தார், கோர்ட்டில் சரணடைந்தார். இவர் கூறிய சம்பவமோ, அல்லது பதிவோ இல்லை என்பதால் இவரை, அதிகாரிகள் விரட்டி அனுப்பிவிட்டார்கள்). அப்படி குற்றம் ஆகியவற்றில் ஆரம்பித்து, மேன்மை பெற்ற ஞானியின் கதைகளுக்கு குறைவே இல்லை.

    8. கடன் கொடுத்தவர் தொல்லை, மனைவி மக்களின் இடைவிடாத தொல்லை என்று பொருளுலகச் சுமை தாங்காமல் அருளுலகத்தைத் தஞ்சம் பெற்ற பலரும் உண்டு. அதில் சிலர் பயனடைந்து, ஞானியாக வெளியே வரும் சிலரின் கதைகளும் உண்டு.

    9. இதில் எந்த வழியில் புகுந்து இறுதியில் அறிவை அடைந்தாலும், இவர்களுக்கு பொதுவான பெயர் ஞானிகள்.

    10. துறவியும் மனிதர்கள் தான் என்ற சிறிய விஷயத்தை நாம் மறக்கக் கூடாது.

    Enjoying the preview?
    Page 1 of 1